"ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" : முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வருகையையொட்டி கோவையில் தி.மு.க.வினர் வைத்த கட்டவுட்

கோவை, டிசம்பர் 27

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வை வரவேற்பதற்காக கோவை சாலைகளில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவர் சில நாட்களுக்கு முன் தான் 2 G வழக்கில் விடுதலை பெற்றார்.



அவரை வரவேற்பதற்காக தி.மு.க. தொண்டர்கள் காளப்பட்டியில் இருந்து கோவையில்பாளையம் செல்லும் சாலையில் வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர். 

கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் உயிரிழந்த் சம்பவத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பேனர்களை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ராசா-வை வரவேற்பதற்காக கோவையில் உள்ள சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...